திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை

திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-08-16 14:01 GMT
திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். நீதிமன்றம் அருகே ஓட்டலில் பெண்கள், குழந்தைகள் என பலரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, பட்டப்பகலில், இந்த கொடூர கொலையை 5 பேர் கொண்ட கும்பல் அரங்கேற்றியது. இந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது.கொல்லப்பட்ட இளைஞர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். சிசிடிவி காமிரா காட்சி மூலம் கொலையாளிகள் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்