நெல்லை தம்பதிக்கு அதீத துணிவிற்கான சிறப்பு விருது வழங்கிய முதலமைச்சர்

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

Update: 2019-08-15 07:39 GMT
சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, தமிழக மீன்வளத்துறை துணை இயக்குனர் ரம்யா லட்சுமிக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் கொள்ளையர்களை துணிவுடன் விரட்டியடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினருக்கு, அதீத துணிவிற்கான சிறப்பு விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்துல் கலாம் விருது அறிவிக்கப்பட்டுள்ள, 'இஸ்ரோ தலைவர் சிவன், மற்றொரு நாளில் முதலமைச்சரிடம் நேரில் வந்து விருதை பெறுவார் என அறிவிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்