முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு

முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு 4 ஆயிரத்து 318 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Update: 2019-08-08 08:33 GMT
முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு 4 ஆயிரத்து 318 கனஅடியாக உயர்ந்துள்ளது.  இதனால் அணையின் நீர்மட்டம் ஓரே நாளில் இரண்டு அடி உயர்ந்துள்ளது. நேற்று 114 அடியாக இருந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம், இன்று காலை 116 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் வைகை அணைக்கு நீர் வரத்து 214 கனஅடியாக அதிகரித்து அணையின்  நீர் மட்டம் 31 புள்ளி 27  அடியாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்