புதுக்கோட்டை : 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 68 வயதான முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-03 09:29 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிஃபுல்லா நகரைச் சேர்ந்தவர் அஸ்ரப் அலி. 68 வயதான இவர், அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, அஸ்ரப் அலிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 7 லட்ச ரூபாயை அஸ்ரப் அலி தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்