டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பேருந்து நடத்துனரை பட்டாக்கத்தியால் வெட்டிய மாணவர்கள்

மதுரையில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து நடத்துனரை பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-07-30 02:04 GMT
நேற்றிரவு பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து, ராஜக்கூர் பகுதிக்கு சென்ற அரசுப் பேருந்தில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவர் ஏறியுள்ளனர். பேருந்து நடத்துனர் கணேஷ், அவர்களிடம் டிக்கெட் எடுக்க கூறியபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  கருப்பாயூரணி பகுதியில் பேருந்து நின்றபோது,  மாணவர்கள் இருவரும், தங்கள் பையில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால், நடத்துனர் கணேஷை  வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர். படுகாயமடைந்த கணேஷை அப்பகுதி மக்கள் மீட்டு, ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மாணவர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்