கோவை வீரபாண்டியில் பரிதவிக்கும் யானை

வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் அவதியுற்ற யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

Update: 2019-07-25 12:34 GMT
வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் அவதியுற்ற யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். கோவை மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி அருகே வால்குட்டை மலையடிவாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் பெண் யானை ஒன்று அவதிப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் அந்த யானை நிற்பதால், இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைக்கு தண்ணீர், உணவு கொடுத்து  சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, யானை நின்று கொண்டு இருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்