குழந்தை கடத்தலை தடுக்க விழிப்புணர்வு : தப்பாட்டம் இசைத்த ரயில்வே பாதுகாப்பு போலீசார்
ரயில் நிலையங்களில் குழந்தை கடத்தலை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாகையில் நடைபெற்றது.
ரயில் நிலையங்களில் குழந்தை கடத்தலை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாகையில் நடைபெற்றது. அதில், துண்டு பிரசுரங்களை வழங்கிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தப்பாட்டம் இசைத்ததோடு, சிறுவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் எனவும் ஜன்னல் ஓரத்தில் பயணிக்கும் பெண்கள் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.