மனு அளிக்க வேப்பிலை மாலை, பானையுடன் வருகை : கடலூர் ஆட்சியரகத்தில் இந்து மக்கள் கட்சியினரால் பரபரப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க, வேப்பிலை மாலை அணிந்து, கஞ்சி பானையுடன் வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-15 12:40 GMT
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க, வேப்பிலை மாலை அணிந்து, கஞ்சி பானையுடன் வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், மாலை மற்றும் கஞ்சி பானைகளை அகற்றிய பின், ஆட்சியர் அலுவலகம் செல்ல அனுமதித்தனர். மனுக்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியினர்,  ஆடி மாதம் கோவில்களில் கூழ் ஊற்றும் திருவிழாவுக்காக அரிசி, கேழ்வரகு தானியங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு வழங்கியதாக தெரிவித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்