தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில் 63,869 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில் 394 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 63 ஆயிரத்து 869 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Update: 2019-07-13 18:46 GMT
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றம் எனும் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள், மதுரைக் கிளையில் ஆறு அமர்வுகள் உள்பட மாநிலம் முழுவதும், 467 அமர்வுகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 44 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.இதில், மொத்தம், 394 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரத்து 853 ரூபாய் மதிப்பிலான, 63 ஆயிரத்து 869 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்