நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் : தூண்டில் பாலம் அமைக்க கோரி மீனவர்கள் மனு

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2019-07-12 09:48 GMT
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மூன்று சக்கர வாகனம்,  தையல் இயந்திரம், வீட்டுமனை பட்டா ஆகியவை பயனாளிகளுக்கு அப்போது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து,  தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தாலை, மணப்பாடு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தூண்டில் பாலம் அமைக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்