தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல்

சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் பணம் கேட்டு ரவுடி ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-07-04 19:58 GMT
சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் பணம் கேட்டு ரவுடி ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த மக்பூல் கோழிக்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் போன் செய்த இம்ரான் என்பவர் தனக்கு 50 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்றும் தராவிட்டால் வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஸ் ஹவுஸ் பகுதியில் கொலை செய்யப்பட்ட அப்பாஸ் என்பவரை தானே கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பயந்து போன மக்பூல் 2 லட்ச ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இருந்தபோதிலும் அதை ஏற்க மறுத்த இம்ரான், தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் பயந்து போன அவர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மக்பூலை இம்ரான் செல்போனில் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்