வேலூர் : புதிய குடிசை மாற்று வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

வேலூர் மாவட்டம், பிள்ளையார் குப்பம் பகுதியில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளதால், அங்கு புதியதாக குடிசை மாற்று வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-25 11:49 GMT
வேலூர் மாவட்டம், பிள்ளையார் குப்பம் பகுதியில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளதால், அங்கு புதியதாக குடிசை மாற்று வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் பகுதியில், ஒரு கிணற்றிலிருந்து ஒரு டேங்க் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த மக்கள் புதிதாக குடியிருப்புகள் வந்தால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்