பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-06-24 06:06 GMT
பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை துறை,  சுகாதாரம், நிதித்துறை உள்ளிட்ட 7 துறை சார்ந்த புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. காணொலி காட்சி மூலம், புதிய திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்