திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் கடத்தல் : 5 பேர் கைது

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

Update: 2019-06-20 20:35 GMT
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள், விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த அசாருதீன், இளையான்குடியை சேர்ந்த முகமது ரசூல் கான், ஷாகுல் ஹமீது, திருப்பூரை சேர்ந்த ஜாபர் அலி, திருச்சியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர், உள்ளாடைக்குள்ளும், ஆசனவாயிலும் மறைத்து எடுத்து வந்த,  59 லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்து 761 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த ஐந்து பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்