ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் : அந்தியூர் போலீசார் தந்த அதிரடி பரிசு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போலீசார் பாராட்டு தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் வழங்கிய போலீசார், 'இனி அபராதம் விதிக்கப்படும்' என எச்சரித்துள்ளனர்.