மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்

தூத்துக்குடி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-18 10:34 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாரியப்பன். இவரின் மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு பிரச்சினை முற்றியதில் கோபமடைந்த மாரியப்பன் தன் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். 

மேலும் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சண்முகப்பிரியாவின் சடலத்தை கைப்பற்றியதோடு உயிருக்கு போராடிய மாரியப்பனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த சம்பவம் நடந்ததால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்