8 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து திரும்பியவர் வரதட்சணை புகாரில் கைது

பரமக்குடியில் வரதட்சணை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து திரும்பிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-18 02:56 GMT
பரமக்குடியில் வரதட்சணை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து திரும்பிய கணவர் கைது செய்யப்பட்டார். விளத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமாறன் என்பவருக்கும் அவரது மனைவி காயத்திரிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் திருமாறன் வேலைக்காக லண்டன் சென்ற நிலையில், அவரது மனைவி காயத்திரி கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் அளித்தார். இந்நிலையில், லண்டனில் இருந்து ஹைதராபாத் விமானம் வந்த திருமாறனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமாறனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்