இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை : சாலை மறியல்-4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நெல்லை அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

Update: 2019-06-13 01:54 GMT
நெல்லை அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கரையிருப்பு பகுதியை சேர்ந்த அசோக் என்பவர்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட பொருளாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அசோக்கின் தாயார், சாலையில் நடந்து சென்றபோது  இரு சக்கர வாகனத்தில் பயணித்த வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மோதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அசோக்கிற்கும் அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தைக்கு இரண்டு தரப்பையும் போலீசார் அழைத்துள்ளனர்.

இந்த நிலையில், பணிக்கு சென்று விட்டு, பேருந்துக்காக காத்திருந்த அசோக்கை சுற்றி வலைத்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. அதில் அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தகவல் ஊருக்குள் பரவியதும் அசோக்கின் உறவினர்கள் , சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்