சாலையின் நடுவே சேதமடைந்த மின்கம்பம் : உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று சாலையின் நடுவே உள்ளது.

Update: 2019-06-12 09:39 GMT
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று சாலையின் நடுவே உள்ளது. முறிந்து விழும் நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் ஏற்காட்டில் ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்