இலங்கை மன்னராக விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

ராமேஷ்வரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் இலங்கை மன்னராக விபீஷணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

Update: 2019-06-11 18:20 GMT
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் தல வரலாற்றை விளக்கும் வகையிலான ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் இரண்டாம் நாளில், ராமேசுவரம் கோவிலில் இருந்து சீதாதேவி, லட்சுமணுடன் தங்க கேடயத்தில் தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ராமபிரான் எழுந்தருளினார். அதன்பின் இலங்கை மன்னராக விபீஷணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்