கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் : பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிப்பு

கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் காரணமாக பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2019-06-11 09:39 GMT
கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் காரணமாக பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கஜா புயல் காரணமாக அதிக அளவு மரங்கள் சேதம் அடைந்ததாலும், பூக்கள் பூக்கும் நேரத்தில் மழை பெய்ததின் காரணமாக பூக்கள் உதிர்ந்ததாலும் இந்த ஆண்டு பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ பழம் 80 முதல் 100 ரூபாய் வரை விற்க்கபட்ட போதிலும் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .  
Tags:    

மேலும் செய்திகள்