"இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை இல்லை" - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-22 22:27 GMT
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்க கோரி பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்,  இலவசமாக தரமான மழலையர் கல்வி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், இடைநிலை ஆசிரியர்களை நியமனம் தொடர்பான அரசாணைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்