வீட்டில் பதுக்கப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் : பதுக்கி வைத்த நபருக்கு போலீசார் வலை

திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-22 18:44 GMT
திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சோழவரத்தில், நாகராஜ் என்பவருக்கு சொந்தமான, வீட்டில் செம்மரக்கட்டைகள் இருப்பதாக காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 2 டன் எடையுள்ள 27 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த சோழவரம் போலீசார், வீட்டின் உரிமையாளர் நாகராஜை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள், திருவள்ளூர் மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்