பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-20 21:52 GMT
சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர்  ஆறுமுகம் என்ற  ரங்கன். விவசாயக் கூலித் தொழிலாளியான  இவரது மனைவி லட்சுமி,  கடந்த 17ம் தேதி இரவு  சிக்கரசம்பாளையம் பிரிவில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர், லட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினார். போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையாளி, சத்தியமங்கலம் வடக்கு பேட்டை  பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தாமோதரன் என்பது தெரியவந்தது. 
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், லட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை அறிந்த அவரது கணவர்  ரங்கன் கண்டித்ததால், லட்சுமி தன்னுடன் பேசாமல் இருந்ததாகவும்,  அந்த ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்