மதுரையில் சாராய வியாபாரி கொலை - இருவர் நீதிமன்றத்தில் சரண்

மதுரையில், முன்னாள் சாராய வியாபாரி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்

Update: 2019-05-16 19:38 GMT
மதுரையில், முன்னாள் சாராய வியாபாரி கொலை  வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு, பால்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த  காளிதாஸ், மணிகண்டன்ஆகிய இருவர்  மதுரை ஜே.எம்.4 நீதிமன்றத்தில்  சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப  மாஜிஸ்திரேட் கவுதமன் உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்