4 நாட்களாக மனைவியின் சடலத்துடன் தங்கிய கணவன்?

திருப்பூரில் பூட்டிய வீட்டுக்குள் இளம் பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-11 12:49 GMT
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டிக்கு அருகே நெசவாளர் காலனியில் தனியார் பனியன் நிறுவன தொழிலாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். திருமுருகன்பூண்டி காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்த போது வீட்டில் அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பது தெரிய வந்துள்ளது. விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த கயல்விழி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக கயல்விழியை காணாததால், அருகில் இருப்பவர்கள் அவரது கணவரான விக்னேஷிடம் விசாரித்துள்ளனர். கயல்விழி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக  விக்னேஷ் கூறியுள்ளார்.  இந்த தகவலை அறிந்த போலீசார் தலைமறைவாக உள்ள விக்னேஷை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்