"ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிப்பு" - தினகரன் குற்றச்சாட்டு
ஜிஎஸ்டியால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதி அமமுக வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து செங்கல்பட்டில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அமமுக வெற்றி பெற்றால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்படவும், தமிழகம் தன்னிறைவு பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்