அரசு பேருந்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை : கணக்கில் வராத ரூ.2,34,000 பறிமுதல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-17 09:52 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கோவையில் இருந்து மதுரை சென்ற அரசுப்பேருந்தில் தேர்தல் பறக்கு படையினர் சோதனை நடத்தினர். அப்போது சங்கரன்கோவிலை சேர்ந்த  முகைதீன் அப்பாஸ் என்பவரிடம் கணக்கில் வராத 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்து வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்