திருச்சி ரயில்வே பணிமனையில் வேலைவாய்ப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் பழகுனர்கள் மனு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடமாநிலத்தவர் என புகார் எழுந்துள்ளது.

Update: 2019-03-11 12:21 GMT
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடமாநிலத்தவர் என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற தொழில் பழகுனருக்கான தேர்வில் மொத்தமுள்ள ஆயிரத்து 765 பணியிடங்களில் ஆயிரத்து 600 இடங்களுக்கு வடமாநிலத்தவரும்,  165 இடங்களுக்கு மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்த கோரியும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் கூடுதல் முன்னுரிமை வழங்க கோரியும் , தொழில் பழகுனர் பயிற்சி முடித்து வேலை கிடைக்காதவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்