கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம்

காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் : 88 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது

Update: 2019-02-22 07:13 GMT
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம் அருகே கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர் பேருந்து நிலையம்  அமைக்கப்படுகிறதுஏற்கனவே, இந்த திட்டம் அமையும் இடத்திற்கு சென்று பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலமாக புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கானஅடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நாட்டினார்மேலும், பள்ளி கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை உட்பட 8 துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் துவக்கி வைத்தார்அமைச்சர்கள், மற்றும் பல்வேறு துறைசெயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்417 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்கிறது.  இரண்டு ஆண்டுகளுக்குள் திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்