பாகிஸ்தான் கொடியை எரிக்க முயன்ற வழக்கறிஞர்கள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வழக்கறிஞர்கள் பாகிஸ்தான் கொடியை எரிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2019-02-18 14:20 GMT
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வழக்கறிஞர்கள் பாகிஸ்தான் கொடியை எரிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய துணை ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டித்தும்,  தீவிரவாதத்திற்கு காரணமான பாகிஸ்தான் அரசை கண்டித்தும் வழக்கறிஞர் கோவிந்தராஜ் தலைமையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சில வழக்கறிஞர்கள் பாகிஸ்தான் கொடியை எரிக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களிடமிருந்து பாகிஸ்தான் கொடியை கைப்பற்றினர்.
Tags:    

மேலும் செய்திகள்