இறக்குமதி துணி பண்டல்கள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் மூலம் திருடனை பிடித்த போலீசார்

சென்னை திருவொற்றியூரில் பிரபல துணிக்கடை இறக்குமதி செய்த துணி பண்டல்களை திருடி சென்றவனை போலீசார், கைது செய்தனர்.

Update: 2019-02-17 21:03 GMT
சென்னை திருவொற்றியூரில் பிரபல துணிக்கடை இறக்குமதி செய்த துணி பண்டல்களை திருடி சென்றவனை போலீசார், கைது செய்தனர்.  துணி பண்டல்கள் இறங்கியபோது கவனித்துக் கொண்டிருந்த இருவர், ஒரு லட்சம் மதிப்புள்ள, துணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மாயமாகினர்.  கடை வாசலில் இறக்கப்பட்ட பண்டல்கள் திருடப்பட்டுள்ளதை அறிந்த கடையின் உரிமையாளர், உடனடியாக  திருவொற்றியூர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.   தகவலறிந்து வந்த போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை  கொண்டு, விசாரித்ததில் திருட்டில் ஈடுபட்ட  விநாயகமூர்த்தி  என்பவனை கைது சிறையில் அடைத்துள்ளதுடன், தலைமறைவான மற்றொரு குற்றவாளி செல்வம் என்பவனைத் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்