என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரகாஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-02-13 21:55 GMT
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரகாஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இருவருக்கும் ஏற்கனவே, முன் விரோதம் இருந்து வந்த நிலையில், தற்போது மோதல் வெடித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரகாஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்