20 வருடங்களாக தீர்க்கப்படாத கழிவுநீர் பிரச்சினை - இளைஞர்களே களத்தில் இறங்கி அகற்றினர்

ஓமலூர் அருகே 20 வருடங்களாக தீர்க்கப்படாத கழிவு நீர் பிரச்சனையை இளைஞர்களே அகற்றினர்.

Update: 2019-01-30 20:11 GMT
ஓமலூர் அருகே 20 வருடங்களாக  தீர்க்கப்படாத கழிவு நீர் பிரச்சனையை இளைஞர்களே அகற்றினர். அமரகுந்தி ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெளியேறும் கழிவு நீர் அங்குள்ள அரசு பள்ளி முன்பு தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறினர்.  இது தொடர்பாக தந்தி டி.வி.யில் செய்தி வெளியான நிலையில், அப்பகுதி இளைஞர்களே ஒன்றிணைந்து கழிவு நீரை அகற்றினர். 
Tags:    

மேலும் செய்திகள்