ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு : தலைமைச் செயலர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் தலைமைச் செயலாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-18 17:28 GMT
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் தலைமைச் செயலாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 19 ஆயிரம் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு, தலைமைச் செயலாளரை பிரதிவாதியாக சேர்த்ததுடன், கணக்கு தணிக்கைத்துறை அறிக்கை தொடர்பாக, நான்கு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்