இலங்கைக்கு கடத்த முயன்ற ரு. 4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்

தூத்துக்குடியின் தஸ்விஸ்புரத்தில் சிலர் கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கடலோர பாதுகாப்புப் படை போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-10 11:17 GMT
தூத்துக்குடியின் தஸ்விஸ்புரத்தில் சிலர் கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கடலோர பாதுகாப்புப் படை போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக, கடல் அட்டைகளை பதப்படுத்தி கொண்டிருந்த இருவரை அவர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிலோ கடல் அட்டைகளும் மற்றும் பதப்படுத்த பயன்படுத்திய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு 4  லட்ச ரூபாய் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்