ஈரான் சிறையில் வாடும் 3 தமிழக மீனவர்கள் - விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை

சவுதி அரேபியாவில் தங்கி மீன் பிடித்து வந்த, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை, ஈரான் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

Update: 2019-01-09 10:20 GMT
சவுதி அரேபியாவில் தங்கி மீன் பிடித்து வந்த, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை, ஈரான் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த சகாய பீட்டர், சுதர்சன், கிறிஸ்து அடிமை ஆகியோர்  சவுதி அரேபியாவில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். மூவரும் கடந்த ஐந்தாம் தேதியன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வழி தவறி ஈரான் கடற்பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, ஈரான் கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடற்கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில், மீனவர்களை ஈரான் கடற்படை  துன்புறுத்துவதாகவும், அவர்களை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்