மண்டல அளவிலான சிலம்பம் மற்றும் களரி போட்டிகள் - சிறுவர்கள் அசத்தல்

தமிழ்நாடு சைலாத் சிலம்பம் பெடரேசன் மற்றும் இண்டியன் சைலாத் சிலம்பம் பெடரேசன் இணைந்து மண்டல அளவிலான களரி போட்டிகள் நடத்தியது.

Update: 2019-01-05 21:20 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையில்  தமிழ்நாடு சைலாத் சிலம்பம் பெடரேசன் மற்றும் இண்டியன் சைலாத் சிலம்பம் பெடரேசன் இணைந்து பள்ளி மாணவ மாணவியருக்கான 3வது ஆண்டு மண்டல அளவிலான சைலாத் சிலம்பம் மற்றும் களரி போட்டிகள் நடத்தியது. உடுமலையில் தனியார் பள்ளியில் நடந்த இப்போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தங்களது சிலம்ப மற்றும் களரி திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளும் வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்