ராமேஸ்வரத்தில் பாபா ராம்தேவ் நடத்திய கடற்கரை யோகா

யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் ராமேஸ்வரத்தில் மூன்று நாட்கள் தேசிய அளவிலான யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Update: 2018-12-28 08:31 GMT
யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் ராமேஸ்வரத்தில் மூன்று நாட்கள் தேசிய அளவிலான யோகா நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது. பாபா ராம் தேவ் யோகாசன மையங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு பாபா ராம்தேவ் யோகப் பயிற்சிகள் அளித்ததை அப்பகுதி மக்கள் கண்டுகளித்தனர். வில்லூண்டி கடற்கரை பகுதியில் நடைபெற்ற யோகா பயிற்சியின்போது பாபா ராம்தேவுக்கும்  மற்றும் அவருடைய சீடர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்