மேலூர் மருத்துவர் வீட்டில் கொள்ளை சம்பவம் : மேலும் ஒரு போலீஸ்காரர் சரண்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மருத்துவர் பா​ஸ்கரன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், திருப்பூரைச் சேர்ந்த போலீஸ்காரர் சரவணக்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Update: 2018-12-20 13:08 GMT
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மருத்துவர் பா​ஸ்கரன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், திருப்பூரைச் சேர்ந்த போலீஸ்காரர் சரவணக்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 6ஆம் தேதி பாஸ்கரன் வீட்டில் துப்பாக்கி முனையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் இதுவரை 10 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் முக்கியமாக சென்னை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் குமார் என்பவர், கொள்ளையர்களுக்கு துப்பாக்கி விநியோகம் செய்ததாகக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இதே வழக்கு தொடர்பாக திருப்பூரில் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த சரவணக்குமார் என்பவர், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்