சென்னையில் அதிகளவு குழந்தை திருமணங்கள் : அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-12-17 10:19 GMT
தமிழக சமூக நலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் இணைந்து, குழந்தை திருமணம் குறித்த கருத்தரங்கை சென்னையில் நடத்தின. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவர் நிர்மலா தேவி, குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கடந்த 2017ம் ஆண்டு சென்னையில் 66 ஆயிரத்து 200 பேருக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல், கோவை,  மதுரை மாவட்டங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாகவும், திரைப்படங்களில் பள்ளி மாணவிகளிடம் காதலைச் சொல்வது போன்ற காட்சிகளை சென்சார் போர்டு அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்