காருக்குள் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காருக்குள் இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை.

Update: 2018-12-10 06:50 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காருக்குள் இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குடியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர், கார் வாடகைக்கு விடும் தொழில் செய்துவந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனை அருகே நீண்ட நேரமாக அவரது கார் நின்றது. சந்தேகமடைந்த அப்பகுதியினர் சோதனையிட்டதில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கார்த்தி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்கு அனுப்பியதோடு, கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்