"ஜெயலலிதாவிற்கு தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை" - இதய நோய் சிறப்பு மருத்துவர் தகவல்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு எந்தவித தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை என்று இதய நோய் சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-08 03:43 GMT
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு எந்தவித தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை என்று இதய நோய் சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதயநோய் சிறப்பு மருத்துவர் கிரிநாத் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், இதயம் தொடர்பான அத்தியாவசிய சிகிச்சை எதுவும் ஜெயலலிதாவுக்கு தேவைப்படவில்லை என மருத்துவர் கிரிநாத் கூறியதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்