Tiruvallur Incident | வீட்டில் உடல் அழுகி எலும்புக்கூடாக கிடந்த சகோதரிகள் | திருவள்ளூரில் அதிர்ச்சி
2 சகோதரிகள் வீட்டில் எலும்புக்கூடாக மீட்பு - விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகள் வீட்டில் உடல் அழுகி எலும்புக்கூடாக மாறிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். உறவினர்கள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்த வீட்டில் நீண்ட நாட்களாக நடமாட்டம் இல்லாததை அடுத்து, விஏஒ மற்றும் பொதுமக்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, இருவரும் சடலங்களாக இருந்தது தெரியவந்தது. இது தற்கொலையா அல்லது உணவின்றி உயிரிழந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.