சுகாதாரத்துறையில் தேசிய அளவில் தமிழகம் முன்னோடி - முதல்வர் பெருமிதம்

சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-03 19:37 GMT
பல சிறந்த திட்டங்களால், சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடியில், புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சிறந்த மருத்துவ சேவைக்காக தமிழக அரசு பல  விருதுகளை பெற்று வருவதாக பெருமிதம் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்