இரவு நேரத்தில் திருநங்கையுடன் சென்ற காவலர்

சென்னையில் இரவு நேரத்தில் திருநங்கையுடன் சென்ற காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Update: 2018-12-03 09:55 GMT
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சத்யராஜ் என்ற காவலர், நேற்று இரவு, பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள மறைவான பகுதிக்கு, திருநங்கை ஒருவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதைக் கண்ட சிலர் செல்போனில் படம் பிடித்து அவரை தாக்க முற்பட்டுள்ளனர். அப்போது, செல்போனில் படம் பிடித்தவர்களிடம் திருநங்கைகள் சிலர் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காவலர் சத்யராஜை பிடித்து பள்ளிக்கரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இன்று சத்தியராஜ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், காவலரை பொதுமக்கள் பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்