வங்கி ஏ.டி.எம்மில் நுழைந்து ரகளை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு

நாமக்கல்லைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மருத்துவமனை அருகே உள்ள வங்கி ஏ.டி.எம்மினுள் நுழைந்து அதனை உடைக்க முயற்சித்துள்ளார்.

Update: 2018-12-03 07:52 GMT
நாமக்கல்லைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று விபத்தில் சிக்கிய நிலையில் சிறுகாயத்துடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கிருந்து வெளியே வந்த அவர், மருத்துவமனை அருகே உள்ள வங்கி ஏ.டி.எம்மினுள் நுழைந்து அதனை உடைக்க முயற்சித்துள்ளார். பணம் எடுக்க வந்தவர்களை உள்ளே செல்ல விடாமலும் ரகளையில் ஈடுபட்டார்.  இதனால் வாடிக்கையாளர்களும், அவ்வழியாக சென்ற பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்