"நிவாரணப் பொருட்களை விமானத்தில் அனுப்ப கட்டணம் இல்லை" - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

தமிழகத்துக்கு நிவாரணப் பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்ப சரக்கு கட்டணத்தை நீக்க, அந்த நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2018-11-29 03:17 GMT
தமிழகத்துக்கு நிவாரணப் பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்ப சரக்கு கட்டணத்தை நீக்க, அந்த நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் நிவாரணப் பொருட்களை வழங்கினால், அவை ஏர் இந்தியா விமானம் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்