போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.