புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - தமிழிசை

கஜா பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவது சிறிது காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-11-20 11:32 GMT
கஜா பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவது சிறிது காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என  பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பா.ஜ.க. சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டு, பாதிப்பு குறித்த அறிக்கை ஒன்று தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என கூறினார். புயல் பாதிப்பில், அரசியல் கட்சியினர் அரசியல் செய்யாமல், களத்தில் இறங்கி உதவி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்